எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 மார்ச், 2016

ஆயிரத்தில் ஒருவர் நீங்கதான்.

ஆயிரத்தில் ஒருவர் நீங்கதான். அந்த ஆயிரத்தில் ஒருவரின் ஒரே ஒரு  கவிதையில் நம்மோடதும் இருக்கணும்.எடுங்க பேனாவை/லாப்டாப்பை, தட்டுங்க கவிதையை அல்லது கவுஜய. அனுப்புங்க கீழே உள்ள ஜி மெயில் முகவரிக்கு.

நாம மட்டும் பர பரன்னு அலைஞ்சா போதுமா. இன்னபிற ப்லாகர்ஸையும் ஃபேஸ்புக்கர்ஸையும் தூக்கம் இல்லாம அலைய விட வேண்டாமா. 

 நண்பர் ஷண்முகம் சுப்ரமணியம் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கிறேன்.


////உலகெங்கிலும் உள்ள ஆயிரம் தமிழ்க் கவிஞர்களது தனித்துவமிக்க கவிதைகளின் தொகுப்பு ஒரு பெரும் நூலாகப் பதிப்பிக்கப்படுகிறது. அப்பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தியுள்ளார். நம் பெருமதிபிற்குரிய கவிஞர் திரு பரீட்சன் . அவர்களது பார்வையினில் உருவாகும் இத்தொகுப்பு; நவீனத் தமிழ்கவிதையின் பன்முக வெளிப்பாட்டை ஒருசேர வாசிக்க வாய்ப்பாகும். 


அவரது இச்சீரிய பணியை ஒருசிறிதேனும் பகிரும் முகமாக கவிஞர்கள் தங்களது கவிதைப் படைப்பை tamilkavithaikal1000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி , அவரது அரிய முன்முயற்ச்சிக்குப் பங்களிக்கலாம்.
இந்த அரிய பணியை மேற்கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய கவிஞர் பரீட்சன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்.
-எஸ்.சண்முகம்-///

ஃபிப்ரவரி 21. அன்று நண்பர் பரீட்சன் அவர்கள் பக்கத்தில் இருந்து இதை ஜமாலன் ஷண்முகம் சுப்ரமணியன் பக்கத்தில் பகிர்ந்திருந்தை இன்று பார்த்தேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். 

///
1000 கவிஞர்கள் கவிதைகள் பெருந்தொகுப்புக்கான கவிதைகளை அனுப்புவற்கான மின்னஞ்சல் முகவரி:
tamilkavithaikal1000@gmail.com
முகநூலில் இல்லாத
உ ங்களுடன் தொடர்புடைய கவிஞர்களுக்கும் தகவலை தெரியப் படுத்தி அவர்களின் கவிதைகளும் இந்த பெரும் தொகுப்பில் இடம் பெற்றிட உதவிடுங்கள்
நன்றி
*பரீட்சன்*///


நன்றி ஜமாலன், ஷண்முகம் & பரீட்சன் சார். :) மாபெரும்  இம்முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் வந்தனங்களும்.

டிஸ்கி :- நாம மட்டும் பர பரன்னு அலைஞ்சா போதுமா. இன்னபிற ப்லாகர்ஸையும் ஃபேஸ்புக்கர்ஸையும் தூக்கம் இல்லாம அலைய விட வேண்டாமா.  அதான் போஸ்ட் போட்டு சிவராத்திரி  ஆக்கிட்டேன் :)


8 கருத்துகள்:

  1. இம்முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி. பகிர்வுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அக்கா...

    இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

    http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

    பதிலளிநீக்கு
  4. என் பங்களிப்பையும் அனுப்பியுள்ளேன். தகவலுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  5. தகவலுக்கு நன்றி சகோ. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி குமார் சகோ. எனது மனமார்ந்த நன்றிகளும் நல்வாழ்த்துகளும்பா. உங்க பெரும் மனது வியக்க வைக்கிறது. :)

    நன்றி உமேஷ்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...