எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.

601. கைப்பெட்டி/கைப்பொட்டி  - கணக்கு வழக்குகள் வைத்திருக்கும் பெட்டி ., மேசையாகவும் உபயோகப்படும். கணக்குச் சிட்டைகள், நோட்டுகள்,  பேரேடுகள், பேனா, பென்சில், குண்டூசி குத்தும் ஸ்பான்ச், ரூபாய் நோட்டுகள், சில்லரைக்காசுகள், வங்கி பாஸ்புத்தகங்கள், செக் புத்தகங்கள்.  ( திருமணம் மற்றும் குடிபுகும் சமயங்களில் - மாமப் பட்டில் முடியும் காசு, மாமப் பட்டு , நூல் கண்டு, மஞ்சள், குங்குமம், வெள்ளிக்காசு, சின்ன நோட்டு,மொய் கொடுக்க கவர்கள், பேனா, முறைதலை கொடுக்கும் நோட்டு, முறைக்குக் கொடுக்கும் பணக் கவர்கள், கணக்குச் சிட்டைகள்,பணம் ) ஆகியன இருக்கும். 

602. ஐந்தொகை., பேரேடு..-- கணக்கு வழக்குகளை குறிக்கும் முறை. ஐந்தொகை என்பது எழுதி இருக்கும் வரவு செலவு இருப்புக் கணக்கு விபரங்களை வகைதொகையாகப் பிரித்து அதன் வகை வாரியாகத் தனித்தனிப் பக்கங்களில் எழுதுவது. பேரேடு என்பது மொத்தமாகக் குறித்து வைத்துக் கொள்வது.

603. பற்று வரவு  - ஒருவர் ன்னுடைய கணக்கில் கடன் வாங்கி இருந்தால் அு பற்று. அத் திரும்பச் செலுத்திக் கணக்கை நேர் செய்ால் அு பற்றுவு.  

604. கொண்டு விக்கப் போதல்/கொண்டு விற்றல். - முதல் எடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யக் கல்கந்த வெளிநாடு செல்லுதல்.

 605. கண்டாங்கி. -  புடவை. சீலை, சரிகைக் கண்டாங்கி என்றால் பட்டுச் சேலை.

606. பாட்டையா - ஐயாவின் தந்தை., அப்பாவின்/அம்மாவின் தாத்தா. 

607. கொள்ளுப் பேரன் பேத்தி. - பேரன் பேத்தியின் குழந்தைகள். , மகன்/மகளின் பேரன்பேத்திகள்.


608. போய்த்தாரேன் - போயிட்டு வர்றேன்.

609. கேதம்/கேதம் கேட்டல் - கேதம் = இறப்பு. கேதம் கேட்டல். = இறப்பைப் பற்றித் துக்கம் விசாரித்தல்.

610. கேதகாரவீடு - இழவு வீடு.

611. கோடி போடுறது - இறந்தவர்மேல் கோடித்துண்டு போர்த்துவார்கள். இறந்தவரின் மனைவி மேல் புது வெள்ளைப் புடவையைத் தாய்வீட்டார் வாங்கிப் போடுவார்கள். இப்போது வெளிர்நிறப் புடவைகள் வாங்கிப் போடுகிறார்கள். 

612. சிவபதவி வண்டி - இறந்தவர்களைக் கட்டத்தலத்துக்குக் கொண்டு செல்லும் வண்டி.

613. கல் எடுத்துப் பால் ஊற்றல் - ஒருவர் இறப்புக்குப் பின் மறுநாள் செய்யும் சடங்கு.

614. கட்டத்தலம்  -  மயானம்  அல்லது மின்மயானம்.  இறுதிக் கிரியைகளைச் செய்யும் இடம்.

615. சவண்டி - ஒருவர் இறப்புக்குப் பின் ஐந்தாம் நாள் செய்யும் சடங்கு.

616. தலைத்திதி/தலைத்திவசம். - ஒருவர் மறைவுக்குப் பின் ஓராண்டு கழித்துச் செய்யும் சடங்கு.

617. வாரது போறது. - வருவது போவது.

618. மட்டுப்படுதல் - ஒருவருக்கு ஒரு விஷயம் புரிபடவில்லை என்றால் மட்டுப்படலை என்பார்கள். அல்லது சில விஷயங்களில் தெளிவு ஏற்படவில்லை என்றாலும் மட்டுப்படலை என்பார்கள். ”இது யார்னு மட்டுப்படல” என்று வயதானவர்கள் சில இளையவர்களைப் பார்த்துக் கூறுவதுண்டு. அதாவது பார்த்திருப்பார்கள் பேர் மறந்திருக்கும். அல்லது எப்போதோ பார்த்த உறவினரின் பேரை அல்லது உறவு முறையை மறந்துவிட்டுச் சொல்லும் வார்த்தை இது.

619. பொட்டியடி -ஒரு விசேஷத்தில்/அனுவலில் கைப்பொட்டி வைத்திருக்கும் இடம் பொட்டியடி எனப்படும். இதை ஒரே ஆளே ஹேண்டில் செய்வார்கள். கணக்கு வழக்குகள் வைத்திருக்கும் இப்பெட்டிக்கு சாவி கூட உண்டு.  பூட்டி வைத்துக் கொள்ளலாம்.  எனவே இதில் வைக்கும் எதுவும் பக்காவாக இருக்கும்.

620. வலசை வந்தவுக - வெளியூரிலிருந்து/ அசலூரிலிருந்து வந்தவர்களைக் குறிப்பது. காரைக்குடிக்கு அநேகம் பேர் வலசை வந்திருப்பார்கள். அவர்களை அந்த ஊரின் பெயரில் குறிப்பது உண்டு. தேவகோட்டையார் வீடு, கடியாபட்டியார் வீடு என்று.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்   

4 கருத்துகள்:

  1. புதிய வார்த்தைகள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. காரைக்குடி சொல்வழக்கு பற்றிய பகுதிகள் டவுன்லோட் செய்ய விரும்புகிறேன். ஆனால் எல்லா பக்கங்களும் திறக்க முடியவில்லை. என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப இயலுமா? - சொர்ணம் செல்வம், நாட்டரசன்கோட்டை

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...